Saturday, August 7, 2010

PAUL OCTOPUS

என்னமோ paul அக்டோபுஸ் நடகபோற எல்லாத்தையும் முன்னாடியே கண்டுபுடிகும்னு கேள்விப்பட்டன். எனக்கு இத கேட்ட உடனே என்னோட கல்லூரி பரிட்சைஅரை தான் ஞாபகம் வந்தது. நான் பரிட்சைக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி படிக்கறது இல்லன்னு ஒரு கொள்கை வெசிருகறவன்.(அதுக்கு முன்னாடியும் சும்மா கதை கேட்பேன் அவளவுதான்) நம்ம தான் உயர்ந்த கொள்கையோட வாழறோமே; நாம படிக்காட்டி எவனும் படிக்கக்கூடாது. அதுவும் அமர்நாத் நு ஒரு பையன் என்னோட ரூம்ல தான் பரிட்சை எழுதுவான். ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சி நல்ல மார்க் எடுக்கறவன். நான் ரூம்க்கு வந்த உடனே புக் எடுத்து அங்கும் இங்குமா தரப்பன். எந்த பக்கம் வருதோ அந்த பக்கத்துல இருந்து தான் கேள்வி வரும்னு கெளப்பி விடுவன். உடனே எல்லாரும் அந்த பக்கத்துல இருக்கறத படிபானுங்க. அதுக்குள்ள நான் அதுத்த பக்கம் எடுப்பன். நான் எடுத்த பக்கத்துல இருந்து கேள்வியும் வந்துருக்கு. அதனால எல்லாரும் என்ன மதிச்சி அந்த கேள்வியலாம் படிக்க ஆரமிசானுங்க. ஏதாவது கஷ்டமான பாடம் வந்தா என்ன விளையாட கூடாதுன்னு மிரட்டவும் செய்வாநுங்க. இதுல அமர்நாத் மட்டும் கோங்கம் வித்தியாசமான ஆளு. கஷ்டமான பரிட்சைனா அவன் வேற எங்கயாவது போய் படிச்சிட்டு சரியாய் பரிட்சை ஆரமிக்கும் பொது தான் வருவான். இத நான் கடைசியா தான் கவனிச்சன். அதுக்கு அப்பறம் அவன் எங்க இருக்கனு தேடி போய் விளையாட்ட ஆரமிப்பன். கடைசியில் இதுவே எங்களுக்குள் ஒரு நல்ல நட்பை வளர்த்தது..

Friday, August 6, 2010

மும்மூர்த்திகள்

ஒருவன் வேலையே இல்லாவிட்டாலும் வேலை செய்வது போல் நடிப்பவன்(யோகி). மற்றொருவன் விதைகள் பல அறிந்தவன்(குங்க்பு உட்பட) ஆனால் கேவலமானவன்(சேது). கடைசி நபர் திறமைசாலி ஆனால் படு சோம்பேறி(பங்கு). எவர்கள் மூவரும் என் வாழ்க்கையில் என்னகு கிடைத்த நெருங்கிய நண்பர்கள். என்ன பண்றது எந்த பக்கம் போனாலும் இவனுங்க தான் வந்து நிக்கரானுங்க. அட என்ன பத்தி சொல்ல மறந்துட்டனே. வேலை கிடைச்சும் வேலை இல்லாத ஒரு வாலிபன். நாங்க நாலு பேரும் காலேஜ் ல ஒன்னா படிச்சவங்க. நானும் யோகியும் நல்லா படிச்சோம், அதனால எங்களுக்கு நல்ல வேலை கடச்சிது. சேதுவும் பங்குவும் படிப்புல எண்கள விட சும்மார்தான். அதனால இன்னும் படிச்சிகிட்டே இருக்கானுங்க. உலகத்துல நம்ம அதிகமா யார தித்துகிரோமோ அவர்கள் தான் நம் நெருங்கிய நண்பர்களாக இர்ருபர்கள்நு ஒரு புக்ல படிச்சன். நாங்களும் அடே மாதிரி தான். எப்ப பாத்தாலும் சண்டை தான். அதுவும் சாபாடுனு வந்துதா அவளவுதான். எல்லா நட்பு வட்டாரத்திலும் ஒரு "ஊறுகாய்" கேரக்டர் இறுக்கும். எங்களுக்கு சேது தான் ஊறுகாய். ஒரு சின்ன நிகழ்வு. நாங்க ரெண்டு பேரும் பைக் ல போய்கிட்டு இருந்தோம். அப்ப ஒரு கார் என் வண்டிய இடிச்சி, வண்டி கண்ணாடி கீழ விழுந்தது. நான் அவசரமா வேகத்த எதி கார் காரண திட்டலாம்னு பார்த்தா பின்னாடி உட்காந்து இருந்த சேது வ காணோம். கீழ விழுந்த கண்ணாடிய பொறுப்பா எடுத்து வர போயிருந்தான். நானும் இவளவு நல்லவனா இவனு நெனச்சன். அப்பறம் ஊற சுத்திட்டு சாயங்காலமா எங்க வீட்டுக்கு போனோம். அப்ப தான் சேது வோட திருக் எனக்கு புரிய வந்தது. வேணும்னே அந்த உடைந்து போன கண்ணாடிய எங்க அப்பா கண்ணுல படர மாதிரி வெச்சி சாட்சியவும் மாறி எனக்கு ஒரு மணி நேரம் நல்லா சாப்பாடு வாங்கி கொடுத்தான். என்னவே நண்பன் எப்போதும் நண்பனாகவே இருந்துவிட்டால் நட்பில் சுவாரசியம் இருக்காது!!! :-) தொடரும்...