சிரிப்பும் சிந்தனையும் கலந்து கிடக்கும் இடம் இது!!! வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளில் கற்பனையை கலந்து மிக சுவாரசியமான நிகழ்வாக மாற்றும் இடம் இது!!!
Saturday, August 7, 2010
PAUL OCTOPUS
என்னமோ paul அக்டோபுஸ் நடகபோற எல்லாத்தையும் முன்னாடியே கண்டுபுடிகும்னு கேள்விப்பட்டன். எனக்கு இத கேட்ட உடனே என்னோட கல்லூரி பரிட்சைஅரை தான் ஞாபகம் வந்தது. நான் பரிட்சைக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி படிக்கறது இல்லன்னு ஒரு கொள்கை வெசிருகறவன்.(அதுக்கு முன்னாடியும் சும்மா கதை கேட்பேன் அவளவுதான்) நம்ம தான் உயர்ந்த கொள்கையோட வாழறோமே; நாம படிக்காட்டி எவனும் படிக்கக்கூடாது. அதுவும் அமர்நாத் நு ஒரு பையன் என்னோட ரூம்ல தான் பரிட்சை எழுதுவான். ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சி நல்ல மார்க் எடுக்கறவன். நான் ரூம்க்கு வந்த உடனே புக் எடுத்து அங்கும் இங்குமா தரப்பன். எந்த பக்கம் வருதோ அந்த பக்கத்துல இருந்து தான் கேள்வி வரும்னு கெளப்பி விடுவன். உடனே எல்லாரும் அந்த பக்கத்துல இருக்கறத படிபானுங்க. அதுக்குள்ள நான் அதுத்த பக்கம் எடுப்பன். நான் எடுத்த பக்கத்துல இருந்து கேள்வியும் வந்துருக்கு. அதனால எல்லாரும் என்ன மதிச்சி அந்த கேள்வியலாம் படிக்க ஆரமிசானுங்க. ஏதாவது கஷ்டமான பாடம் வந்தா என்ன விளையாட கூடாதுன்னு மிரட்டவும் செய்வாநுங்க. இதுல அமர்நாத் மட்டும் கோங்கம் வித்தியாசமான ஆளு. கஷ்டமான பரிட்சைனா அவன் வேற எங்கயாவது போய் படிச்சிட்டு சரியாய் பரிட்சை ஆரமிக்கும் பொது தான் வருவான். இத நான் கடைசியா தான் கவனிச்சன். அதுக்கு அப்பறம் அவன் எங்க இருக்கனு தேடி போய் விளையாட்ட ஆரமிப்பன். கடைசியில் இதுவே எங்களுக்குள் ஒரு நல்ல நட்பை வளர்த்தது..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment